விஜயகாந்துக்கு கொரோனா எப்படி வந்தது? பிரேமலதா பேட்டி!

கேப்டன் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு கொரோனா எப்படி ஏற்பட்டது என்பதே தெரியவில்லை என அவருடைய மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா கூறியுள்ளார்.

சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ‘விஜயகாந்துக்கு இலேசான கொரோனா அறிகுறிகள் மட்டுமே இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விஜயகாந்த் தற்போது பூரண உடல் நலத்துடன் நலமுடன் இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

மேலும் விஜயகாந்துக்கு ஒரு சில நாட்களிலேயே கொரோனா சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார். விஜயகாந்த் உடல் நலம் குறித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு ரஜினிகாந்த் விசாரித்தார் என்றும் அவருக்கு தனது நன்றி என்றும் அவர் கூறினார்.

மேலும் விஜயகாந்துக்கு கொரோனா எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை என்று கூறிய பிரேமலதா, விஜயகாந்த் அடுத்த ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் கூறினார். மேலும் கேப்டன் விஜயகாந்த் அடுத்த வாரம் முதல் ஆன்லைனில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் பிரேமலதா கூறியுள்ளார்.

More News

எல்லைத் தாண்டி ரோந்து பணியாற்றிய அதிகாரி… மண்ணெய் ஊற்றி எரித்த கொடூரச் சம்பவம்…

சர்வாதிகாரத்தின் உச்சமாகக் கருதப்படும் வடகொரியா தற்போது கொலை நடுங்க வைக்கும் ஒரு சம்பவத்தை செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தினமும் அடி, உதை… கணவரின் தொல்லை தாங்காமல் கொன்று, கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்த மனைவி!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் இளம்பெண் ஒருவர் கணவருடன் நடந்த வாக்குவாதத்தின்போது கயிற்றைக் கொண்டு அவரது கழுத்தை இறுக்கியிருக்கிறார்.

விஜயகாந்த் எப்படி இருக்காரு? நலம் விசாரித்த ரஜினிகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி: தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு 

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து 10, 11, 12 வகுப்புகளின் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்

கைது செய்யப்படுகிறாரா மீராமிதுன்? ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு!

பிக்பாஸ் 3வது சீசன் போட்டியாளரும், சூப்பர் மாடலுமான மீராமிதுன், பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும்போதே சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்டார்.