தேர்தல் நாளில் 'பிரேமலு' நாயகிக்கு ஏற்பட்ட சோகம்.. விழிப்புணர்வு ஏற்படுத்தியவருக்கே இந்த நிலையா?

  • IndiaGlitz, [Friday,April 26 2024]

கேரளாவில் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் வாக்களித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் வாக்களிக்க சென்ற ‘பிரேமலு’ நடிகைக்கு மிகப்பெரிய ஏமாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்தது. இதையடுத்து கேரளா உள்பட சில மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் அங்கு போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் இன்று பகத் பாசில், டொவினோ தாமஸ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் வாக்களித்து வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் ‘பிரேமலு’ நாயகி மமிதா பாஜூ வாக்களிக்க வாக்கு சாவடிக்கு சென்றார். அப்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிந்த தகவல் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

நடிகை மமிதா பாஜு கடந்த சில மாதங்களாக சினிமாவில் பிஸியாக இருப்பதால் வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இருக்கிறதா என்பதை சரி பார்க்கவில்லை என அவரது தந்தை கூறினார். அதுமட்டுமின்றி கேரளாவில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தேர்தல் ஆணையம் மமிதாவை பயன்படுத்தியது என்றும் ஆனால் அவருக்கே வாக்காளர் பட்டியலில் இடமில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது என்றும் அவரது தந்தை கூறியுள்ளார்.

More News

காதலரை அன்ஃபாலோ செய்த ஸ்ருதிஹாசன் .. மறுபடியும் பிரேக் அப்?

நடிகை ஸ்ருதிஹாசன் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை காதலித்து அதன் பின் பிரேக்கப் ஆன நிலையில் தற்போது மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து

நயன்தாராவும் சமந்தாவும் சொல்லி வச்சு செஞ்சாங்களா.. ஒரே மாதிரி இருக்குதே..!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் ஹாலிவுட் நடிகைகள் போல் காஸ்ட்யூம் அணிந்து பிளாக் அண்ட் ஒயிட் போட்டோஷூட்

தாமரை மலரும்.. மாற்றம் வேண்டும்.. ரஜினி, விஜய் பட நடிகையின் அம்மா பேட்டி..!

கேரளாவில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்பட பல பிரபலங்கள் உடன் நடித்த நடிகையின் அம்மா 'தாமரை மலர வேண்டும்

மெல்லிய சிமிட்டல்கள் போதும்… சிறுசிறு அசைவுகள் போதும்… பார்வையால் கொல்லும் ரம்யா பாண்டியன்..!

நடிகை ரம்யா பாண்டியன் பார்வையால் கொல்லும் வீடியோவை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியாக உள்ளனர்.

ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் கமல்? திரையுலகினர் ஆச்சரியம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு திரைப்படத்தில் வெறும் 15 நிமிடங்கள் மட்டும் தோன்றுவதாகவும் அதற்காக அவர் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுவதை அடுத்து ஒரு நிமிடத்திற்கு ஒரு