குறைமாத குழந்தைகளின் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வு.

  • IndiaGlitz, [Tuesday,April 16 2024]


கர்ப்பக் காலத்தில் 37 வாரங்களுக்கு முன்பே பிறக்க கூடிய குழந்தையை குறைமாத குழந்தை மற்றும் குறைப்பிரசவம் என அழைக்கப்படுகிறது.முழுமாத குழந்தை பிரசவம் என்பது 40 வாரங்கள் ஆகும்.முன்கூட்டிய பிரசவத்தின் அறிகுறிகள் என்பது கருப்பை சுருக்கம்,யோனியிலிருந்து திரவம் கசிவு போன்றவையாகும்.

குறைமாத குழைந்தைகள் பிறப்பதற்கான அடிப்படை காரணங்கள்:

ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் அக்குழந்தை எடை குறைவான குழந்தை,பெண்கள் மிக சிறிய வயதில் திருமணம் செய்தால்,தாய்க்கு நீண்ட கால பாதிப்பான இதய நோய்,சிறுநீரக நோய் மேலும் பொருளாதார நிலையில் பின்தங்கி இருந்தாலும் அல்லது அதிக எடை மற்றும் உயரம்,கர்ப்ப காலத்தில் அதிகமா இரத்த போக்கு,அதிகமான அனாவசிய வேலை,மன உளைச்சல் போன்ற பல காரணங்களினால் குறை மாத குழந்தைகள் பிறக்கின்றன.

முன்கூட்டிய பிரசவத்திற்கான காரணிகள்:

1.கர்பத்தின்போது அதிக எடை அல்லது குறைவான எடை.
2.உளவியல் ரீதியான மன அழுத்தம்.
3.கர்ப்ப காலத்தில் மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல்,போதை பொருளுக்கு அடிமையாகி இருத்தல்.
4.இரட்டை அல்லது பல கர்ப்பம்.
5.நீரிழிவு நோய்,பிறப்புறுப்பு நோய் தொற்றுகள்,அதிக இரத்த அழுத்தம்,
6.மகப்பேறு சமயத்தின் கவனிப்பில் குறைபாடு.
7.குழந்தையின் பிறப்பு குறைபாடுகள்.

குறைப்பிரசவத்தின் போது கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகள்:

1.முதுகு வலி,உங்கள் நிலையை மாற்றும்போது ஏற்படும் வலிகள்.
2.யோனியிலிருந்து கசியும் திரவம்.
3.அடிவயிற்று வயிறு வலி
4.மாதவிடாய் போன்ற இரத்த போக்கு.

முன்கூட்டியே பிறக்கும் குழந்தையின் நிலை:

உலகில் 10% குழந்தைகள் குறைமாதத்தில் பிறக்கின்றனர்.ஆனால் அவர்கள் முதிர்ந்த வயதில் ஆரோக்கியமாக இருக்கின்றனர்.இந்த மாதிரியான முழு மாதம் இல்லாமல் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சி மெதுவாக உள்ளது.பெருமூளை வாதம்,அறிவுசார் குறைபாடு,செவித்திறன் குறைபாடு,
உடல் நல பிரச்சனைகள் போன்ற ஆபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த மாதிரியான குறை மாதத்தில் பிறக்கும் குழந்தையை எப்படி பராமரிப்பது:

நுரையீரல்,செரிமான அமைப்பு,நோயெதிர்ப்பு அமைப்பு போன்றவை சரியாக வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் இது போன்ற குறை மாதத்தில் பிறந்த குழந்தையின் மீது இன்னும் அதிகமான கவனம் தேவை.அந்த குழந்தை இயல்பான நிலைக்கு வரும் வரை அதனை மேலும் அதிக பராமரிப்போடு வைத்து கொள்வது சிறந்தது.
 

More News

வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கொடுத்த வாக்குறுதி.. வெற்றி நிலவரம் எப்படி இருக்கிறது?

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேரணாம்பட்டு, பத்தலப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில்

'மெளன ராகம்' சீரியல் ஜோடியின் 'எங்கேஜ்மெண்ட்'.. அசத்தல் புகைப்படங்கள்.. புரியாமல் குவியும் வாழ்த்துக்கள்..!

'மெளன ராகம்' சீரியலில் நடித்த ஜோடி தற்போது 'எங்கேஜ்மெண்ட்' என்ற புதிய சீரியலில் நடிக்கவுள்ள  நிலையில் இவர்கள் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பார்த்து இருவரும்

ரஜினியின் 2 படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மறைவு.. இரங்கல் தெரிவித்த ரஜினி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இரண்டு படங்கள் உட்பட சில தமிழ் படங்களையும் ஏராளமான கன்னட படங்களையும் தயாரித்த தயாரிப்பாளர் காலமான நிலையில் அவருக்கு

ஆக்‌ஷன் - ரியாக்சன்.. மைக் மோகனை இந்த ஆங்கிளில் பார்த்ததே இல்லையே.. 'ஹரா' டீசர்.!

நடந்த 90 ஆம் ஆண்டுகளில் மைக் பைக் மோகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகர் மோகன் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகராக இருந்தார் என்பதும் கமல், ரஜினி ஆகியோர் உச்சத்தில் இருந்தபோது

5 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்த இன்னொரு மலையாள படம்.. ஏக்கத்துடன் பார்க்கும் தமிழ் திரையுலகம்..!

ஏற்கனவே ஒரு சில மலையாள திரைப்படங்கள் 100 கோடி, 200 கோடி என வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்னொரு திரைப்படம் 8 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து தமிழ்