நவம்பரில் கொரோனா தடுப்பூசி? பரபரப்பை ஏற்படுத்தும் மகிழ்ச்சி தகவல்!!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஒரே முடிவு தடுப்பூசி மட்டுமே எனக் கருதப்பட்டு வரும் நிலையில் அத்தடுப்பூசி கண்டுபிடிப்பில் ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னிலையில் இருந்து வருகின்றன. இந்நாடுகளுக்கு இடையே யார் முதலில் கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவது என்ற போட்டியும் நிலவுகிறது. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசி தற்போது இறுதிக்கட்ட பரிசோதனையை அடைந்து இருக்கிறது.

அந்தப் பரிசோதனைக்காக இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் இருந்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தடுப்பூசிக்கான பரிசோதனைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையிலும் வெற்றிகரமான முடிவுகள் வெளியான நிலையில் தற்போது இறுதிக்கட்ட பரிசோதனையிலும் வெற்றிகரமான முடிவுகள் கிடைத்து இருப்பதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்து உள்ளது.

இதனால் ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் இரண்டும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி இளம் வயது முதல் பெரியவர்கள் வரை ஒரே அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இங்கிலாந்து அரசாங்கம் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க இருப்பதாகவும் அந்நாட்டு பத்திரிக்கை ஒன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இதற்காக இங்கிலாந்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு நவம்பர் 2 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு இங்கிலாந்து மக்களிடையே கடும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு வழியாக கொரோனா தடுப்பூசியின் இறுதியான முடிவை ஆக்ஸ்போர்ட் அறிவித்து இருப்பதாக உலக நாடுகள் பலவும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றன.

More News

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 11 பேர்: தப்பிய ஐவர் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அந்த நாமினேஷனில் சிக்கியவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வார இறுதியில் வெளியேற்றப்படுவார்

என்கிட்ட தான் பிரச்சனை இருக்கோ? கன்பஃக்சன் அறையில் கதறி அழும் அனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று மொத்தம் உள்ள 16 போட்டியாளர்களில் 11 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர் என்பது தெரிந்தது

லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன் திடீர் உயிரிழப்பு

திருச்சி லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் திடீரென உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகை குஷ்பு கைது!

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ சிதம்பரம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென முட்டுக்காடு அருகே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளது

புருனே நாட்டு இளம் வயது இளவரசர் திடீர் மரணம்!!! உலகத் தலைவர்கள் இரங்கல்!!!

புருனே நாட்டு சுல்தான் ஹசனல் போங்கியாவின் மகனும் அந்நாட்டு இளவரசருமான ஹாஜி அப்துல் அசம்