close
Choose your channels

விக்னேஷ் சிவன் - நயன்தாரா செய்தியாளர் சந்திப்பு: என்ன சொன்னாங்க தெரியுமா?

Saturday, June 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமணத்திற்கு மறுநாள் இந்த தம்பதிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு இன்று சற்று முன் சென்னையில் பத்திரிகையாளர்களை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிகள் சந்தித்தனர்

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது நயன்தாரா முதலில் பேசிய போது ’இவ்வளவு நாள் எங்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிகவும் நன்றி, தற்போது திருமணம் ஆகிவிட்டது, இனிமேலும் உங்களுடைய ஆதரவு எங்களுடைய வாழ்க்கைக்கு தேவை. நீங்கள் அனைவரும் இங்கே வந்ததற்கு நன்றி’ என்று கூறினார்

அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசியபோது, ‘அனைவருக்கும் நன்றி! நான் முதன்முதலில் இந்த ஹோட்டல்லிதான் நான் நயன்தாராவை கதை சொல்ல சந்தித்தேன். இன்று அதே ஓட்டலில் உங்களை சந்திப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். எங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு உங்கள் ஆதரவு எப்போதும் தேவை’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.