தமிழில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

  • IndiaGlitz, [Friday,April 14 2017]

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் இன்று தமிழ்ப்புத்தாண்டு தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் அனைவருக்கும் குடியரசு தலைவர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாரத பிரதம நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளத்தில் தமிழில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ' 'என் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமருக்கு பலர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்படும் இதே நாள் கேரளாவில் விஷு பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கிறிஸ்துவ மக்கள் இன்று 'புனித வெள்ளி' தினத்தை கொண்டாடி வருகின்றனர். அதுகுறித்து பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், 'ஏசு கிறிஸ்துவின் சேவை மற்றும் தியாகத்தை நாம் நினைவு கொள்ள வேண்டும்' என பதிவு செய்துள்ளார்.

More News

தேசிய விருதில் பாகுபாடு என்பது எனது கருத்து மட்டுமல்ல. ஏ.ஆர்.முருகதாஸ்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. குறிப்பாக அமீர்கானின் 'டங்கல்' படத்திற்கு விருது கிடைக்காதது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

விஜய்சேதுபதியின் 25வது படத்தின் டைட்டில் அறிவிப்பு

இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவரும் ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களை வெளியிட்டு வருபவருமான நடிகர் விஜய்சேதுபதி தற்போது 25வது படம் என்ற மைல்கல்லை தொட்டுவிட்டார். இவரது 25வது படத்திற்கு 'சீதக்காதி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது...

'8 தோட்டாக்கள்' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ

சமீபத்தில் வெளிவந்த இளம் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்' திரைப்படம் அனைத்து தரப்பினரின் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஊடகங்கள் மற்றும் சமூக இணையதளங்களில் கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்தது...

கார்த்திக் தற்கொலை வழக்கு. மைனா நந்தினி கைது ஆவாரா?

பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் சமீபத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மக்களின் கவிஞர் 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்' பிறந்த தின கட்டுரை

இந்த பாடலை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் எழுதி சுமார் 50 வருடங்கள் ஆகிவிட்டது.