close
Choose your channels

சென்னை நிவாரண நிதிக்காக 250ஐ 25ஆக மாற்றிய பிருத்விராஜ்

Wednesday, December 9, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோலிவுட் நடிகர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் உள்ள நடிகர்களும், பாலிவுட் நடிகர்களும் நிதியுதவி மற்றும் பொருளுதவி செய்து வருகின்றனர்.


இந்நிலையில் தமிழில் மொழி, ராவணன், உள்பட பல படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ், தன்னுடைய 'பாவாட' படத்தின் இசை வெளியீட்டை எளிமையாக நடத்தி அதன்மூலம் மிச்சமான பணத்தை சென்னை நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

முதலில் 'பாவாட' படத்தின் இசை வெளியீட்டை சுமார் 250 பேர்களை அழைத்து பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்ததாகவும், ஆனால் சென்னையின் துயரத்தை அறிந்தவுடன் வெறும் 25 பேர்களை மட்டும் அழைத்து எளிமையாக இசை வெளியீட்டை முடித்துவிட்டு மிச்சமான விருந்து செலவுத்தொகையை சென்னை நிவாரண நிதிக்கு பிருத்விராஜ் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிருத்விராஜனின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.