close
Choose your channels

திடீரென சூழ்ந்த வெள்ளம்: ஜோதிகா பட நாயகனின் அம்மா சிக்கியதால் பரபரப்பு

Saturday, May 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திடீரென சூழ்ந்துகொண்ட வெள்ளத்தில் பிரபல ஹீரோவின் அம்மா சிக்கிக் கொண்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழில் ஜோதிகா நடித்த ‘மொழி’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் நடிகர் பிரத்விராஜ். இவர் ’கனாக்கண்டேன்’ ’பாரிஜாதம்’ ‘சத்தம் போடாதே’ ’வெள்ளித்திரை’ ’நினைத்தாலே இனிக்கும்’ ’காவிய தலைவன்’ உள்பட தமிழ் படங்களிலும் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்தவர். இவருடைய அம்மா மல்லிகா சுகுமாரன் என்பவரும் ஒரு நடிகை தான். இவர் தமிழில் சீமான் இயக்கிய ’வாழ்த்துக்கள்’ என்ற படத்தில் நடித்துள்ளார்

இந்த நிலையில் நடிகை மல்லிகா சுகுமாரன் தனது வீட்டில் இருந்தபோது அந்த பகுதியில் பயங்கர மழை பெய்துள்ளது. இதனை அடுத்து அவருடைய வீட்டின் அருகில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அவருடைய வீடு தண்ணீரால் சூழப்பட்டது

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நடிகை மல்லிகா சுகுமாரனை வெள்ளத்தில் இருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மல்லிகா சுகுமாரன் கூறிய போது ’எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் அணையின் ஷட்டரை திறந்து விட்டதால் தான் வெள்ளம் சூழ்ந்து விட்டதாகவும், தனது வீட்டுக்கு அருகில் உள்ள கால்வாயில் சரிசெய்யாமல் இருந்தது தான் இந்த வெள்ளத்துக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்

ஏற்கனவே கடந்த ஆண்டு இவரது வீட்டை சுற்றி வெள்ளம் சூழ்ந்தது என்பதும் அப்போதும் தீயணைப்புத் துறையினர் அவரைக் காப்பாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.