ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் இணையும் 'எல்.கே.ஜி' நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,March 02 2021]

நடிகர் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கும் அடுத்த திரைப்படம் ’பாதாய் ஹோ’ என்ற பாலிவுட் படத்தின் ரீமேக் என்றும் இந்த படத்திற்கு அவர் ’வீட்ல விசேஷங்க’ என்ற டைட்டில் வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. பாலிவுட்டில் 29 கோடி பட்ஜெட்டில் தயாராகி 200க்கும் மேற்பட்ட கோடிகளை வசூல் செய்த இந்த படத்தின் தமிழ் ரீமேக் குறித்த பணிகளை ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ப்ரியா ஆனந்த் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ப்ரியா ஆனந்த் ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி நடித்த ‘எல்.கே.ஜி’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க சத்யராஜ் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தை ஆர்ஜே பாலாஜி என்.ஜே.சரவணன் என்பவருடன் இணைந்த இயக்கவுள்ளார் என்பதும் இவர்கள் இருவரும் இணைந்து தான் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை இயக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

திமுக சார்பில் போட்டியிட தமிழ் திரைப்பட ஹீரோவின் மனைவி விருப்பமனு!

தமிழகத்தில் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய மலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 9 வயது இந்தியச் சிறுமி!

உலகிலேயே உயரமான மலை சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடுத்து 2 ஆவது உயரமான மலை சிகரமாகக் கருதப்படுவது

கிரிக்கெட் போட்டியில் ஆட்டநாயகனுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு… வைரல் தகவல்!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டிவிட்டது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகளா இது? நெட்டிசன்களை அலற வைத்த வைரல் புகைப்படம்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்- கௌரி கான் தம்பதியினருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்

கிறிஸ், ரோகித் சர்மா இவங்க வேற லெவல்… பேட்டிங் சாதனை பட்டியல்!

பேட்டிங்கில் ரவுண்டு கட்டிக் கலக்கும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரர் கிறிஸ் கெயில் மற்றும் இந்திய வீரர் ரோகித் சர்மா குறித்து மனம் திறந்து இருக்கிறார்