close
Choose your channels

ஹேட்டர்களுக்கு ப்ரியா அட்லியின் அதிரடி பதில்!

Monday, July 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான அட்லி தளபதி விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என 3 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அவரது படங்கள் அனைத்தும் காப்பி என்று ஒரு சிலர் விமர்சனம் செய்வதும் உண்டு.

அட்லியின் ’ராஜா ராணி’ திரைப்படம் ’மௌனராகம்’ படத்தின் காப்பி என்றும் ’தெறி’ திரைப்படம் விஜயகாந்தின் ’சத்ரியன்’ படத்தின் காப்பி என்றும் ’மெர்சல்’ திரைப்படம் கமல்ஹாசனின் ’அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் காப்பி என்றும் நெட்டிசன்கள் குற்றஞ்சாடி வருவதுண்டு. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அட்லி கண்டுகொள்வதில்லை என்பதும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அட்லியின் மனைவி பிரியா அட்லி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிய ப்ரியா அட்லி, ‘அட்லியின் ஹேட்டர்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ‘எங்கள் மீது இன்னும் அதிக அன்பு கொண்டுள்ளவர்களுக்கு எனது நன்றி. அன்பை பரப்புவோம்’ என்று அதிரடியாக பதில் அளித்து உள்ளார்.

ஹேட்டர்கள் மீதும் அன்பு செலுத்துவோம் என்ற பிரியா அட்லியின் இந்த பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.