பிரபல நடிகரின் மகன் நடிக்கும் ஐந்து மொழி படத்தில் ப்ரியா பவானிசங்கர்

  • IndiaGlitz, [Friday,March 06 2020]

தமிழில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானிசங்கர் தற்போது ‘இந்தியன் 2’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் ஐந்து மொழிகளில் தயாராக உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்க பிரியா பவானிசங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் ஹீரோவாக நடிக்கவிருக்கும் திரைப்படம் ஒன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராக உள்ளது. இந்த படத்தின் கதை ஐந்து மொழிகளுக்கும் பொதுவான என்பதால் இந்த படம் இத்தனை மொழிகளில் தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண்தேஜா இந்த பட துவக்க விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினர்களை வாழ்த்தினார். பேபி நிவாரணா இயக்கவுள்ள இந்த படத்தின் திரைக்கதையை மோகன் பாபு மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 11ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த படத்தின் மூலம் தெலுங்கு உள்பட நான்கு மொழிகளிலும் பிரியா பவானி சங்கர் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படம் வெற்றி பெற்றால் அவர் தென்னிந்திய அளவில் புகழ் பெற வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குணமாகி வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று..! திணறும் மருத்துவர்கள்.

எப்படி முழுமையாக குணமாகும் அதற்கு எவ்வளவு நாள் ஆகும் என தெரியாமல் மருத்துவர்கள் குழம்பி நிற்பதால் இந்த வைரஸ் மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.    

நடிகைகளை ஓரங்கட்டிய தொலைக்காட்சி விஜே: சேலையில் இவ்வளவு கவர்ச்சியா?

விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்கள் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்கள் என்பது தெரிந்ததே. சிவகார்த்திகேயன்,

இனி பயப்படாமல் கலப்பு திருமணம் செய்யலாம்!!! கேரள அரசின் புதிய நடவடிக்கை

சாதி, மதம் மாறி கலப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கேரள அரசு காப்பகங்களை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது.

எச்சரிக்கை..! டெல்லி கலவரத்திற்கு எதிராக இரான் தலைவர் கண்டணம்.வைரல் டிவீட்.

உலகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படாமல் இருக்க இந்திய அரசானது இந்துத்துவ ஆதரவாளர்கள் மற்றும் அது சார்ந்த கட்சியினருக்கு எதிராக முடிவெடுத்து இஸ்லாமியர் படுகொலைகள் திரும்பவும் நடக்காமல் தடுக்க வேண்டும்

ஜனநாயகத்தை காதலித்த பர்மாவின் பெண் போராளி ஆங் சாங் சூகி; முரணுக்குள் மாட்டிக் கொண்ட வரலாறு

உலகில் ஒரு தலைவர் புகழப்பட்ட அளவிற்கு வெறுப்பிற்கும் ஆளாகி இருக்கிறார் என்றால் அது கண்டிப்பாக சூகி ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.