'நீ ஒரு மோசமான டீன் ஏஜ் பாய்': காதலர் பிறந்த நாளில் பிரியா பவானிசங்கரின் பதிவு!

  • IndiaGlitz, [Friday,January 28 2022]

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் பத்து வருடமாக ஒரு இளைஞரை காதலித்து வரும் நிலையில் தனது காதலரின் பிறந்த நாளை அடுத்து ’நீ ஒரு மோசமான டீன் ஏஜ் பாய்’ என பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான பிரியா பவானி சங்கர் ராஜவேல் என்பவரை கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக காதலித்து வருகிறார். அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் தனது காதலரின் புகைப்படங்களை பதிவு செய்து வரும் பிரியா பவானி சங்கர், தனது காதலரின் பிறந்த நாளை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் தனது காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு செய்துள்ளார்.

’நீ ஒரு மோசமான டீன் ஏஜ் பையனில் இருந்து ஒரு அற்புதமான மனிதராக மாறி இருப்பதை நான் பார்த்து வருகிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எப்பொழுதும் புன்னகை, சாகசங்கள், அன்பு, நட்பு, ஆசீர்வாதம், அமைதி, ஆரோக்கியம் என அனைத்தும் உனக்கு கிடைக்க வாழ்த்துகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் உனக்கு பிடிக்காது என்று தெரியும், அதனால் தான் இதை நான் பதிவு செய்துள்ளேன் என்றும் பின் குறிப்பாக பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

டைட்டானிக் போஸில் ஆர்யா-சாயிஷா: ஜாலியான ஹாலிடே புகைப்படம்!

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான ஆர்யா மற்றும் சாயிஷா டைட்டானிக்  ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

தெலுங்கில் தடம்பதிக்கும் ஜான்வி கபூர்… ரசிகர்களை குஷிப்படுத்தும் தகவல்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதிகளின் மூத்த மகளான ஜான்வி கபூர்

காதலிக்கு மறக்கமுடியாத பரிசு வழங்கிய ரொனால்டோ… வியப்பில் ரசிகர்கள்!

உலகின் நெம்பர் ஒன் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலியின் 28 ஆவது பிறந்தநாளை துபாயில்

தல தோனியின் சென்னை வருகை… என்ன காரணம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சென்னை வந்துள்ளார்.

மாடர்ன் டிரெஸ்ஸில் மயக்கும் போட்டோஷூட்டில் அதிதி ஷங்கர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் 'விருமன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் தேன்மொழி என்ற கிராமத்து கேரக்டரில்