ஹரி-அருண்விஜய் படத்தின் நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,January 27 2021]

நடிகர் அருண் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார் என்பதும் அருண் விஜய்யின் 33வது படமான இந்த படம் அதிரடி ஆக்ஷன் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்த படம் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க பிரியா பவானிசங்கரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் தரப்பில் இருந்து வெளியாகும் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தை தயாரிக்கும் டிரம்ஸ்டிக் நிறுவனம் அதிகாரபூர்வமாக இந்த படத்தின் நாயகி ப்ரியா பவானிசங்கர் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து ப்ரியா பவானி சங்கருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் திரையுலகில் பிஸியாக இருக்கும் பிரியா பவானிசங்கர் ஏற்கனவே ’இந்தியன் 2’ ’ருத்ரன்’ ’பத்துதல’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

விமான விபத்தில் 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! பரிதாப சம்பவம்!

தென் அமெரிக்க நாடானா பிரேசிலில் நடைபெற்ற ஒரு சிறிய ரக விமான விபத்தில் அந்நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

தீரன்பட பாணியில் செயல்பட்ட கொள்ளைக் கும்பல் பிடிபட்டது எப்படி? வடமாநிலக் கும்பலா?

சீர்காழியில் 2 பேரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு 16 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்பவர்கள் கோமாளிகள்: தமிழ் ஹீரோ ஆவேசம்!

போராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்று சொல்பவர்கள் கோமாளிகள் என்றும் அவர்களை புறக்கணியுங்கள் என்றும் தமிழ் ஹீரோ ஒருவர் ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிசிசிஐ தலைவர் கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி நெஞ்சு வலி காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளளார்.

'மாஸ்டர்' ஓடிடி ரிலீஸ்க்கு ஆதரவு அளித்த திரையரங்க உரிமையாளர்! ஆனால்....

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து தற்போதும்