close
Choose your channels

எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை: கி.ரா. மறைவு குறித்து நடிகை பிரியா பவானிசங்கர்!

Tuesday, May 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்களின் மறைவு குறித்து கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரமுகர்களும், முதல்வர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக பிரியா பவானிசங்கர் கி.ரா மறைவு குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பதாவது:

கி.ராஜநாரயணன் தமிழ் பேசினா அபராதம் கட்டனும்னு கிளாஸ் லீடர் பெயர் எழுத சொல்ற பள்ளியில் படித்தவர் நான். அப்படி ஒரு வாழ்க்கைமுறையில் ஒரு தனியார் நூலகர் பரிந்துரையில் ‘கோபல்ல கிராமம்’ மூலம் அறிமுகமானவர் தான் கி.ரா

அப்புறம் 14,15 வயதில், ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ அப்படிங்கற பேர் நம்மல இம்ப்ரஸ் பண்ண, ஒரு குறுகுறுப்புடன் அதை நூலகர் கிட்ட வச்ச என்னை நினைச்சா எனக்கே சில சமயம் பரிதாபமாக இருக்கும். அதன் வழி கி்.ரா இன்னும் பரிச்சயமாகிறார். அவருடைய சிறுகதைகள் நான் வாழாத உலகத்தை மனசுல பதியவச்சுது. எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை. இப்பவும் என்னை புன்னகைக்க வைக்கிறார். நிறைவான வாழ்க்கை’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.