close
Choose your channels

கவிஞராக மாறிய பிரியா பவானிசங்கர்: க்யூட் கவிதை வைரல்

Wednesday, February 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவிதை ஒன்று எழுதி உள்ளதை அடுத்து அந்த கவிதை தற்போது வைரலாகி வருகிறது

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் புகழ்பெற்ற பிரியா பவானி சங்கர், ‘மேயாதமான்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் ’கடைக்குட்டி சிங்கம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர் தற்போது தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ சிம்புவின் ’பத்து தல’ அருண்விஜயின் ’யானை’ உள்பட 9 படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் ஒரு கவிதையை எழுதி பதிவு செய்துள்ளார். அந்த கவிதை இதோ:

மௌனம் பகிர்ந்து
கை விரல் பிடித்து
கதை பேசிய இரவு
விடியாமலே போயிருந்தால் தான் என்ன?

உனக்கு மட்டும் கேட்ட
என் மனம் இசைத்த பாடல்
மொழி தேடாமல்
உன்னோடே சேர்ந்து தூரம் போனது.
வரிகளற்ற என் பாடலை திருப்பிக்கொடு.
இம்முறை மௌனம் புரிய என்னிடம் ‘நாம்’ இல்லை
வார்த்தைகள் நிரப்பி நானே வைத்துக் கொள்கிறேன்

இயற்கை வர்ணித்து எழுதிய இந்த கவிதைக்கு கேப்ஷனாக பாடல்கள் மற்றும் பாடுபவர் பிரியா பவானி சங்கர் என்று அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து அவர் நடித்து வரும் படத்திற்காக இந்த பாடலை எழுதி பாடி இருப்பார் என்ற என்று கருதப்படுகிறது. இருப்பினும் கவிஞராக மாறிய பிரியாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.