close
Choose your channels

'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் தேசிய விருது பெற்ற நடிகை?

Wednesday, December 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் இயக்கி வருவது தெரிந்ததே. அந்த வகையில் இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு ’தலைவி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமியும் நடித்து வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு என்றால் அதில் சசிகலா கேரக்டர் இல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே ‘தலைவி’ படத்தில் சசிகலா கேரக்டரில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்த நிலையில், தற்போது சசிகலா கேரக்டரில் நடிகை பிரியாமணி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

’பருத்தி வீரன்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் இந்த படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகிறார். சமீபத்தில் வெளிவந்த ’தலைவி’ படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் பொருந்தாமல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறிவரும் நிலையில் சசிகலா கேரக்டருக்கு பிரியாமணி பொருத்தமாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.