close
Choose your channels

உங்களிடம் இருந்து நான் கற்று கொண்டது இதுதான்.. அஜித் குறித்து நடிகை பிரியா வாரியர்..!

Friday, April 11, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பிரியா வாரியர் நடிகர் அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் நடித்தது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் உணர்ச்சிமயமான பதிவை எழுதியுள்ளார். அந்த பதிவில் எவ்வளவு எழுதினாலும் போதாது என கூறியுள்ள நிலையில் அந்த பதிவு இதோ:

எவ்வளவு எழுதினாலும் தீராது... ஆனால் எங்கிருந்து நான் தொடங்குவது? நீண்ட நாட்களுக்கு முன்னதாக இது நடந்துவிட்டது. என்ன எழுதினாலும் நான் எவ்வளவு அஜித்தை மதிக்கிறேன் என்பதை வெளிப்படுத்த முடியாது. முதல்முறையாக பேசியதில் இருந்து கடைசி நாள் படப்பிடிப்பு வரை அவர் என் உறவினர் போல பார்த்துக்கொண்டார். அனைவரையும் வெளி ஆள் என்பது போல சிறிது நேரமும் அவர் எங்களை உணர வைக்கவில்லை.

அஜித் படப்பிடிப்பில் இருக்கும் போது அனைவரும் நலமாக இருப்பதை ஒவ்வொரு முறையும் கவனித்து கொள்வார். நாம் ஒன்றாக சாப்பிட்ட அனைத்தையும் இங்கு குறிப்பிடாமல் இருக்கவே முடியாது. நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்த அந்த நாள்கள் மிகவும் சிறந்தது.

இவ்வளவு எழுதுவதற்கு ஒரே காரணம் உங்களிடம் இருக்கும் ’பினோச்சியோ' என்ற கார்டூன் கதாபாத்திரத்தை நான் மிகவும் மதிக்கிறேன், நேசிக்கிறேன். குடும்பம், கார் ரேஸ், பயணம் குறித்து நீங்கள் பேசும்போதெல்லாம் எவ்வளவு மிளிர்கிறீர்கள் என்பதை நான் உங்கள் கண்களில் பார்த்துள்ளேன். உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் அனைத்தையும் கவனித்து அதற்கு மதிப்பவளிப்பவர் நீங்கள்.

உங்களது பொறுமை, ஆர்வம் இளம் நடிகையாக எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்தது. நான் இவ்வளவு எழுதுவதற்கு காரணம் உங்களது தன்னடக்கமும் ஜென்டில்மேன் அம்சம் தான். நீங்கள் உண்மையில் ஒரு மாணிக்கம்.

உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது என்னவெனில் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதே. ’தொட்டு தொட்டு’ பாடலை நான் எனது சினிமா வாழ்க்கையில் எப்போதும் மிகவும் பிடித்த தருணமாக நினைக்கிறேன். குட் பேட் அக்லி படத்தில் உங்களுடன் நடித்த அனுபவத்தை எப்போதும் நெஞ்சில் பாதுகாத்து வைப்பேன்.

உங்களை நேரில் சந்திக்கவும் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். தயவுசெய்து எங்கள் அனைவரையும் தொடர்ந்து உங்களது படங்களால் மகிழ்வியுங்கள். மீண்டும் உங்களுடன் வேலைப் பார்க்க வேண்டும் என சுயநலமாக விரும்புகிறேன். அதிகமான அன்புடனும் மரியாதையுடனும் உங்களது அதி தீவிர ரசிகையாக நான்

இவ்வாறு நடிகை பிரியா வாரியர் தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment