close
Choose your channels

ப்ரியாமணியின் பாடிபில்டிங்கிற்கு உதவிய கணவர்: வைரலாகும் புகைப்படம்

Monday, July 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியாமணி. நடிகர் கார்த்தி நடித்த முதல் படமான ’பருத்தி வீரன்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்

இந்த நிலையில் பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின் அவர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா விடுமுறையில் தனது வித்தியாசமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் பிரியாமணி தற்போது பாடிபில்டிங் குறித்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

பிரியாமணி தனது இரண்டு கைகளையும் பின்பக்கம் வைத்து கொள்ள, அவருடைய இரண்டு கைகளாக அவருடைய கணவரின் கைகள் உள்ளது போல் கேமிரா ட்ரிக்கில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை நடிகை பிரியாமணி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். பிரியாமணியா இது? என்று பலர் ஆச்சரியப்பட்ட பலர் உற்றுப் பார்த்த போது தான் அது கேமிரா ட்ரிக் என்பது தெரிய வந்தது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை பிரியாமணி தற்போது தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.