close
Choose your channels

கீர்த்திசுரேஷ் நடிக்கவிருந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை: பரபரப்பு தகவல் 

Monday, January 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ மற்றும் அஜீத் நடித்து வரும் ’வலிமை’ ஆகிய படங்களை தயாரித்த போனிகபூர் தயாரிக்கும் திரைப்படம் ’மைதான்’. கால்பந்து வீரர் ஒருவரின் உண்மை கதையான இந்தப் படத்தில் அஜய் தேவ்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடைய மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்பந்தமாகி இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் தயாராகி வந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 168’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமானதால் மைதான், தலைவர் 168’ ஆகிய இரண்டு படங்களுக்கும் ஒரேநாளில் கால்ஷீட் தேவைப்பட்டதால் ’மைதான்’ படத்திலிருந்து கீர்த்திசுரேஷ் விலகியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்த ’மைதான்’ படத்தில் தற்போது தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி நடிக்க உள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் போனிகபூர் அலுவலகத்தில் ‘மைதான்’ இயக்குனரை சந்தித்து பேசியதாகவும் அவர் கூறிய கதை தனக்கு மிகவும் பிடித்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் ஜனவரி 20 முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் பிரியாமணி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடிகை ப்ரியாமணி, ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.