close
Choose your channels

'கேங் லீடர்' நாயகியை இயக்குனரிடம் பரிந்துரை செய்த சிவகார்த்திகேயன்!

Friday, September 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் இன்று வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. எனவே இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஒரு படத்தை ’கோலமாவு கோகிலா’ பட இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து இந்த படத்தின் நாயகியை சிவகார்த்திகேயனே இயக்குனரிடம் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கு தமிழ் நன்றாக பேசக்கூடிய ஒரு குடும்பத்தனமான லுக் உள்ள நாயகியை படக்குழுவினர் தேடிவந்த நிலையில் தெலுங்கில் நானி நடித்த ’கேங் லீடர்’ என்ற படத்தில் நடித்து வரும் நடிகை பிரியங்கா அருள் மோகன் என்பவரின் புகைப்படத்தை தான் பார்த்ததாகவும், இந்த படத்திற்கு பிரியங்கா பொருத்தமாக இருப்பார் என்று பரிந்துரை செய்ததாகவும் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் பிரியங்கா குறித்து விசாரித்தபோது அவர் சென்னையில்தான் இருப்பதாகவும் தமிழ் நன்றாக பேசுவதாகவும் தெரிய வந்ததாகவும் அவரை இந்த படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் ஏற்கனவே ’இரும்புத்திரை’ இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ’ஹீரோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார் மேலும் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் அவர் விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.