close
Choose your channels

மூன்றே மாதத்தில் விவாகரத்தா? பிரியங்கா சோப்ரா ரசிகர்கள் அதிர்ச்சி

Saturday, March 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் விஜய்யுடன் 'தமிழன்' படத்திலும் பல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து புகழ்பெற்ற நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு நிக்கி ஜோன்ஸ் என்பவருடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜோத்பூரில் கலாச்சார முறைப்படி திருமணம் நடந்தது. நிக்கி ஜோன்ஸ் , பிரியங்காவை விட பத்து வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திருமணத்திற்கு பின் பார்ட்டி உள்பட வெளியில் செல்லும் இடங்களில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், தினசரி வாழ்க்கையில் கூட பிரியங்காவை ஜோன்ஸ் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் இதனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒருசில ஹாலிவுட் ஊடகங்கள் இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஆனால் பிரியங்கா சோப்ராவின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து கூறியபோது இந்த செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்றும், பிரியங்கா-ஜோன்ஸ் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திருமணமான மூன்றே மாதங்களில் விவகாரத்து குறித்த செய்திகள் வெளிவந்துள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.