ரூ.1000 கோடி பட்ஜெட் படத்தில் இணைந்த பிரியங்கா சோப்ரா.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்று செய்திகள் வெளியாகின. மேலும், இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் படப்பிடிப்பில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 28ஆம் தேதி வரை இந்த படத்தின் சில முக்கிய காட்சிகள் தியோமாலி, தலமாலி போன்ற மலைப்பிரதேசங்களில் படமாக்க அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், இதில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா உள்பட 500 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்த படம் மிகவும் பிரமாண்டமாக உருவாக உள்ளது. மேலும், இதில் பிரியங்கா சோப்ரா இணைந்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதுவரை படமாக்கப்படாத பல இடங்களில் இந்த படம் உருவாக இருப்பதாகவும், இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments