ரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கையை படமாக்கும் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Wednesday,May 10 2017]

கோலிவுட்டில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய பிரியங்கா சோப்ரா அதன் பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக உள்ளார். அதுமட்டுமின்றி அவ்வப்போது பிராந்திய மொழிகளில் படங்களை தயாரித்தும் வருகிறார்.
அந்த வகையில் பிரியங்கா சோப்ரா தயாரிக்கும் அடுத்த படம் இந்திய தேசிய கீத பாடலை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம். தாகூர் 17 வயது இளைஞராக இருந்தபோது அன்னபூர்ணா என்ற பெண்ணின் மீது அவருக்கு ஏற்பட்ட காதலுடன் படம் தொடங்குகிறதாம். இந்த படத்திற்கு 'நளினி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அன்னபூர்ணாவை தாகூர் நளினி என்றுதான் அழைப்பதுண்டாம்.
'நளினி' படத்தயாரிப்பை பிரியங்கா சோப்ராவின் தாயார் உறுதி செய்துள்ளார். இந்த படம் குறித்து அவர் கூறுகையில், 'நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தயாரிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்த படம் உணர்வுபூர்வமாக மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கும்' என்று கூறினார். இந்த படம் பெங்காலி, மராத்தி, இந்தி மொழிகளில் உருவாகவுள்ளது.

More News

பொன்னியின் செல்வன்' கேரக்டர்களுக்கு பொருத்தமானவர் யார்?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி, 'பாகுபலி 2' ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியை அடுத்து பெரிய இயக்குனர்களின் பார்வை சரித்திர படங்களின் பக்கம் திரும்பியுள்ளது.

அஜித், விஜய்யை அடுத்து ஐரோப்பா செல்லும் தனுஷ்

தல அஜித் தற்போது நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பிற்காக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் உள்ளார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

இன்றைய இளையதலைமுறை ரசிகர்களின் ரசனைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பழம்பெரும் இயக்குனர்கள் பலர் படம் இயக்குவதையே விட்டுவிட்டனர். ஆனால் இளையதலைமுறையினர்களின் ரசனையை புரிந்து கொண்டு இப்போதும் வெற்றிப்படங்கள் கொடுக்கும் ஒருசில இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிகுமார்...

மும்பையில் உலகப்புகழ் பெற்ற பாப் பாடகரின் இசை நிகழ்ச்சி

கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் உலகப்புகழ் பெற்றவர். 21வயதிலேயே உலகின் பல நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்தி மில்லியன் கணக்கான டாலர் சம்பாதித்துள்ளார்.