அன்பை ஆயுதமாக பயன்படுத்துறீங்களா? கமல் கேள்விக்கு பிரியங்கா கூறிய குழப்பமான பதில்!

அன்பை ஆயுதமாக பயன்படுத்துறீங்களா? என கமல்ஹாசன் கேட்ட கேள்விக்கு குழப்பமாகவும் திக்கித்திணறியும் பிரியங்கா பதில் சொல்லும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 91வது நாளாக நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய முதல் புரோமோ வீடியோவில் அன்பை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா பிரியங்கா? என்ற கேள்வியை கமல்ஹாசன் எழுப்பினார். அதற்கு பிரியங்கா, ‘நான் எப்பொழுதுமே வெளியிலும் சரி இங்கேயும் சரி அன்பை நான் அனைவருக்கும் கொடுப்பேன் என்று கூறினார்.

அப்போது கமலஹாசன் குறுக்கிட்டு, ‘பொதுமக்கள் சொல்வது என்னவென்றால் நீங்கள் உங்களுடைய வெற்றிக்காக அன்பை ஆயுதமாக பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கிறார்கள் என கேட்க அதற்கு பிரியங்கா ’வெற்றிக்காக அன்பை ஆயுதமாக பயன்படுத்துகிறேன் என்றால் அது சந்தோசமான விஷயமாக நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்று திக்கித் திணறி குழப்பமாக கூறுகிறார்.

பிரியங்காவின் இந்த பதிலைக் கேட்டதும் அமீர் சிரிக்க, ‘அதோ பாருங்க அமீர் சிரிக்கிறார் என்று கமல் சுட்டிக்காட்டுகிறார். அப்போது அமீர் எழுந்து, ‘என்னிடம் இந்த ஒரு கேள்வி குறித்து மட்டும் எதுவும் கேட்காதீர்கள் சார்’ எனக்கூற ’அது எப்படி உங்களை விட முடியும்’ என கமல்ஹாசன் சிரித்துக்கொண்டே கூறும் காட்சிகள் இன்றைய புரமோவில் உள்ளன.