வெளிநாட்டில் ஒரு கலக்கலான கிளாமர் போட்டோஷூட்.. பிரியங்கா மோகன் பதிவுக்கு குவியும் லைக்ஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல நடிகை பிரியங்கா மோகன், வெளிநாட்டில் எடுக்கப்பட்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் பெறப்பட்டு வருகின்றன.
தமிழ் திரை உலகில் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா மோகன், அதன் பிறகு சூர்யாவுடன் ’எதற்கும் துணிந்தவன்’, சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும், தெலுங்கிலும் சில படங்களில் நடித்த நிலையில் தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’, அதன்பிறகு தனுஷ் இயக்கத்தில் உருவான ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் 6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை வைத்துள்ள பிரியங்கா மோகன், துருக்கி நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த போது எடுத்த கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அதில், 'என்னுடைய துருக்கி கனவு தற்போது தான் நனவாகியுள்ளது. அற்புதமான கடற்கரை பகுதிகள் முதல் சின்ன சின்ன அதிசயங்கள் வரை இந்த நகரில் எல்லாமே இருந்தது. ஒவ்வொரு நகரமும் தனக்கே உரிய ஒரு மாயாஜாலத்தை கொண்டிருக்கும். அதேபோல் துருக்கியிலும் பல மாயாஜாலங்கள் உள்ளன. இந்த மகிழ்ச்சியை நான் பதட்டம் இல்லாமல் அனுபவித்தேன். இந்த பயணம் எனக்கு மிகவும் எளிமையாக மறக்க முடியாத அனுபவமாக இருந்தது,' என்று பதிவு செய்துள்ளார் பிரியங்கா மோகன்.
இந்த பதிவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட, சுமார் 2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
shared by Priyanka Mohan (@priyankaamohanofficial)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments