இவருக்கு பதில் இவர்.. ஜீ தமிழ் சீரியலில் மீண்டும் பிரியங்கா நல்காரி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சன் டிவியில் ஒளிபரப்பான ’ரோஜா’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி, ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஜீ தமிழ் சேனலில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ’மாரி’. 800 எபிசோடுகளை கடந்து பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த தொடரில் நாயகனாக ஆதர்ஷ், நாயகியாக ஆஷிகா படுகோனே நடித்து வந்தனர்.
அமானுஷ்ய காட்சிகள் கொண்ட இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென நாயகி ஆஷிகா படுகோனே இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் ஆஷிகாவுக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி பார்வையாளர்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது பிரியங்கா நல்காரி இந்த சீரியலில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் டிவியில் ’ரோஜா’ தொடரின் மூலம் பிரபலமான பிரியங்கா நல்காரி அதன் பிறகு ஜீ தமிழ் சேனலில் ’நளதமயந்தி’ என்ற தொடரில் நடித்தார் . ஆனால் அந்த தொடரில் இருந்து திடீரென அவர் விலகிய நிலையில் தற்போது மீண்டும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’மாரி’தொடரில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா நல்காரி இணைந்த பிறகு இந்த தொடருக்கு கிடைக்கும் வரவேற்பு அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com