close
Choose your channels

அடிதடியில் இறங்கிய தாமரை-பிரியங்கா: நடவடிக்கை எடுப்பாரா பிக்பாஸ்?

Tuesday, December 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் டிக்கெட்டு டு ஃபினாலே என்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஆவேசமாக விளையாடி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் தாமரை மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் ஆவேசமாக ஒருவரை ஒருவர் கைகலப்பில் ஈடுபட்ட கொண்டார்கள் என்பதைப் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான அடுத்த புரமோவில் இதுகுறித்து பிரியங்கா கூறும்போது ’நான் முதலில் அடிக்கவில்லை, ஆனால் என்னை யாராவது அட்டாக் செய்தால் நானும் அட்டாக் செய்வேன். நான் என்ன அவ்வளவு இளக்காரமா? என் மண்டையில் இளிச்சவாயி என்று எழுதி ஒட்டி இருக்கா? நான் அவளுக்காக எத்தனை முறை வாதாடி இருக்கின்றேன்.

இனிமேல் தாமரையுடன் எப்பொழுதும் நான் பேசமாட்டேன், இந்த பிக் பாஸ் ஷோ முடியும்வரை தாமரையுடன் இனி பேச மாட்டேன் என்று பிரியங்கா ஆதங்கத்துடன் கூறுகிறார். இடையிடையே அவர் கூறும்போது தாமரையை பிரியங்கா அட்டாக் செய்வதும், பிரியங்காவை தாமரை அட்டாக் செய்வதுமான காட்சிகள் புரமோவில் உள்ளன. 

பிக்பாஸ் நிகழ்ச்சி பொருத்தவரை கைகலப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலையில் தாமரை மற்றும் பிரியங்கா ஆகிய இருவர் மீதும் பிக்பாஸ் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.