தூக்கில் தொங்கிய 13 வயது பள்ளி மாணவி… பாலியல் வன்கொடுமைக்கு தூண்டப்பட்டாரா???

  • IndiaGlitz, [Friday,September 25 2020]

 

சென்னை வேளச்சேரி பகுதியில் கடந்த ஜுன் 14 ஆம் தேதி 13 வயது பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்த போலீஸ் தற்போது குணசீலன் (33) என்ற வாலிபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மாணவியின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த குணசீலன் இச்சவம்பவத்திற்குப் பின் வீட்டை காலி செய்துவிட்டு பெருங்குடி பகுதிக்கு குடி புகுந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ் தீவிர விசாரணையை நடத்தி இருக்கின்றனர். மேலும் மாணவி பயன்படுத்திய செல்போனில் குணசீலனுடன் நெருக்கமாக இருந்தது போல வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருப்பதையும் கண்டுபிடித்து உள்ளனர். இதைத் தொடர்ந்து குணசீலனை தேடிவந்த போலீஸ் நேற்று வால்பாறை அருகே பதுங்கியிருந்தபோது கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

குணசீலனுடன் மேற்கொண்ட விசாரணையில் “மாணவிக்கு நான்தான் பள்ளிப் பாடங்களை சொல்லிக் கொடுத்து வந்தேன். அப்போது அவருடன் நெருக்கமாக பழகி வந்தேன். மேலும் நெருக்கமாக இருப்பதுபோல வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து வைத்து என்னுடைய ஆசைக்கு இணங்குமாறு கேட்டேன். அவள் மறுப்பு தெரிவித்தாள். அதனால் அவளது அம்மாவிற்கு ஆபாச குறுஞ்செய்தியை அனுப்பினேன். அக்குறுஞ்செய்தியை அழித்து விட்டு அவள் தற்கொலை செய்து கொண்டாள்” எனத் தெரிவித்து இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

கீழடியில் 21 அடுக்குக் கொண்ட உறை கிணறு... வெட்ட வெளிச்சமான தமிழர் நாகரிகம்!!!

சிவகங்ககை மாவட்டத்தின் திருப்புவனம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தொல்பொருள் ஆய்வுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

என்ன ஒரு அருமையான போட்டோஷாப்? கண்டனம் தெரிவித்த மறைந்த நடிகரின் மனைவி!

ஆக்சன் கிங் அர்ஜூன் சகோதரர் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென மரணம் அடைந்தது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. 39 வயதான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம்

எஸ்பிபி கவலைக்கிடம்: மருத்துவமனைக்கு விரைந்த பாரதிராஜா

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை நேற்று இரவு முதல் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் அவரை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்

எஸ்பிபி சிகிச்சை பெறும் மருத்துவமனை முன் போலீசார் குவிப்பு: என்ன ஆச்சு?

பாடகர் எஸ்பிபி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் சற்று முன் அந்த மருத்துவமனை முன் போலீசார் குவிக்கப்பட்டு

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - டெல்லி மீண்டு வந்து மிரட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.