close
Choose your channels

தூக்கில் தொங்கிய 13 வயது பள்ளி மாணவி… பாலியல் வன்கொடுமைக்கு தூண்டப்பட்டாரா???

Friday, September 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூக்கில் தொங்கிய 13 வயது பள்ளி மாணவி… பாலியல் வன்கொடுமைக்கு தூண்டப்பட்டாரா???

 

சென்னை வேளச்சேரி பகுதியில் கடந்த ஜுன் 14 ஆம் தேதி 13 வயது பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்த போலீஸ் தற்போது குணசீலன் (33) என்ற வாலிபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மாணவியின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த குணசீலன் இச்சவம்பவத்திற்குப் பின் வீட்டை காலி செய்துவிட்டு பெருங்குடி பகுதிக்கு குடி புகுந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ் தீவிர விசாரணையை நடத்தி இருக்கின்றனர். மேலும் மாணவி பயன்படுத்திய செல்போனில் குணசீலனுடன் நெருக்கமாக இருந்தது போல வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருப்பதையும் கண்டுபிடித்து உள்ளனர். இதைத் தொடர்ந்து குணசீலனை தேடிவந்த போலீஸ் நேற்று வால்பாறை அருகே பதுங்கியிருந்தபோது கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

குணசீலனுடன் மேற்கொண்ட விசாரணையில் “மாணவிக்கு நான்தான் பள்ளிப் பாடங்களை சொல்லிக் கொடுத்து வந்தேன். அப்போது அவருடன் நெருக்கமாக பழகி வந்தேன். மேலும் நெருக்கமாக இருப்பதுபோல வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து வைத்து என்னுடைய ஆசைக்கு இணங்குமாறு கேட்டேன். அவள் மறுப்பு தெரிவித்தாள். அதனால் அவளது அம்மாவிற்கு ஆபாச குறுஞ்செய்தியை அனுப்பினேன். அக்குறுஞ்செய்தியை அழித்து விட்டு அவள் தற்கொலை செய்து கொண்டாள்” எனத் தெரிவித்து இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.