தமிழ் திரைப்பட ஹீரோ மீது ரூ.5 கோடி மோசடிப்புகார் கொடுத்த தயாரிப்பாளர்!

  • IndiaGlitz, [Wednesday,April 20 2022]

தமிழ் திரைப்பட ஹீரோ மீது ஐந்து கோடி ரூபாய் மோசடி புகாரை தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்துள்ளதை அடுத்து திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் திரையுலகின் ஹீரோக்களில் ஒருவர் விமல் என்பதும் சமீபத்தில் இவர் நடித்த ’விலங்கு’ என்ற தொடர் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் கோபி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் ’மன்னார் வகையறா’ என்ற படத்தை விமல் எடுத்த போது தன்னிடம் 5 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும் அந்த படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை வாங்கிய கடனையும் திருப்பி தரவில்லை என்றும் லாபத்தில் பங்கும் தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நடிகர் விமல் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தனக்கு தரவேண்டிய ஐந்து கோடி ரூபாயை திருப்பி தராமல் இருப்பதோடு பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், எனவே விமல் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து தனக்கு வரவேண்டிய 5 கோடி ரூபாயை வசூலித்து தரும்படியும் அந்த புகாரில் தயாரிப்பாளர் கோபி குறிப்பிட்டுள்ளார்.

More News

துபாய் சென்றாலும் பழக்கத்தை மாற்றாத சமந்தா: வைரல் புகைப்படம்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா துபாய்க்கு சுற்றுலா சென்ற போதிலும் அவர் தனது பழக்கத்தை மாற்ற வில்லை என்பதை நிரூபிக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

அழகு, ஆரோக்கியம் என்றால் என்ன? பிரியா பவானிசங்கரின் வித்தியசமான விளக்கம்!

அழகு, ஆரோக்கியம் என்றால் நாம் நினைப்பது போல் பளிச்சென்று இருப்பதும் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வதும் கிடையாது என்றும் அதற்கு அர்த்தமே வேறு என்றும் நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகை தமன்னாவின் வேற லெவல் வொர்க்-அவுட்: வைரல் வீடியோ

 தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விஜய், பூஜா ஹெக்டே குறித்து அபர்ணா தாஸ் கூறியது என்ன தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்த போதிலும்

தமிழக முதல்வருக்கு புதிய அடைமொழி பெயர் வைத்த இயக்குனர் சீனுராமசாமி!

 இயக்குனர் சீனு ராமசாமி தனது படத்தில் நடிக்கும் ஹீரோக்களுக்கு புதிய அடைமொழி பெயர் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். விஜய் சேதுபதிக்கு 'மக்கள் செல்வன்' என்றும் உதயநிதிக்கு 'மக்கள் அன்பன்