விஷாலின் வேட்புமனு மீது தேர்தல் அதிகாரியின் அதிரடி நடவடிக்கை

  • IndiaGlitz, [Sunday,February 05 2017]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் என்பதை நேற்று பார்த்தோம். இவரது வேட்புமனுவை உலகநாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஷாலின் வேட்புமனுவை திடீரென தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் அவர்கள் நிறுத்தி வைத்துள்ளார். இதுகுறித்து தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தயாரிப்பாளர் சங்க தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் 5ல் தேர்தல் நடைபெறும். இறுதி வேட்பாளர் பட்டியல் பிப்.8 ஆம் தேதி வெளியிடப்படும். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 6 பேரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விஷாலின் மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விஷாலின் வேட்பு மனுவிற்கு ஏதிராக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாட இருப்பதால் அவருடைய மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் முடிவை பொறுத்து அவரது மனு பரிசிலிக்கப்படும். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 99 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 2 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது."

இவ்வாறு தயாரிப்பாளர் சங்க தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

More News

பணத்தை விட சக்தி உள்ளது எது தெரியுமா? ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. இமயமலை உள்பட பல ஆன்மீக தலங்களுக்கு அவர் சென்று வழிபாடு நடத்தியுள்ளார். மேலும் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்....

சென்னை மெரீனா தடை உத்தரவு வாபஸ். காவல்துறை அறிவிப்பு

சென்னை மெரீனாவில் சமீபத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சிப்போராட்டத்தின் கடைசி தினத்தன்று ஒருசில சமூக விரோதிகளால் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையால் மெரீனாவை சுற்றியுள்ள பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டது. காவல்நிலையம் உள்பட பல இடங்களில் சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்டது...

கேரள சூர்யா ரசிகர்களின் போலீஸ் புகார்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி 3' திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. முதல் இரண்டு பாகங்கள் நல்ல வெற்றியை பெற்றதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...

'பைரவா' படக்குழுவுக்கு இளையதளபதியின் இனிய பரிசு

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளிவந்து திருப்திகரமான வசூலை தந்து கொண்டிருக்கின்றது. கலவையான விமர்சனம், ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவற்றையும் மீறி விநியோகிஸ்தர்களுக்கு லாபம் தந்த படங்களில் ஒன்றாக ''பைரவா' இருந்ததால் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்...

வேட்புமனு தாக்கல் செய்தவுடன் விஷாலின் அதிரடி அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவை அடுத்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விஷாலின் மன்னிப்பை ஏற்று சஸ்பெண்டை ரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். சஸ்பெண்ட் ரத்து செய்த சில நிமிடங்களில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக விஷால் அறிவித்தார்.