close
Choose your channels

இதனால் தான் ரஜினிகாந்த் உயர்ந்து நிற்கிறார்: பிரபல தயாரிப்பாளர் பாராட்டு!

Thursday, October 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தின் சொத்து வரி குறித்த பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரஜினிக்கு நீதிபதி தெரிவித்த கண்டனத்தை வைத்து ரஜினியை பிடிக்காதவர்கள் மீம்ஸ்களை பதிவு செய்து கேலியும் கிண்டலும் செய்து வருகின்றார்கள். அதே நேரத்தில் ரஜினியின் ஆதரவாளர்கள் ரஜினிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் "ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த ட்விட்டுக்கும் வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் பதிவாகி வரும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டுவிட்டரில் ’செய்த தவறை ஒப்புக் கொள்வதில் தான் ஆளுமை வெளிப்படுகிறது என்றும், அதனால்தான் ரஜினிகாந்த் உயர்ந்து நிற்கிறார்’ என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஒரு தவறை வெளிப்படியாக ஒப்புக் கொள்வதில் தான் சிறந்த மனிதத்தன்மை/ஆளுமை வெளிப்படுகிறது. அப்படி செய்து உயர்ந்து நிற்கிறார். 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos