close
Choose your channels

பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பது உண்மையா? தயாரிப்பாளர் விளக்கம்

Thursday, June 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுதேவா இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்
விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடிக்கும் ’கருப்புராஜா வெள்ளைராஜா’ என்ற திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவிருப்பதாகவும், இந்த படத்தை பிரபுதேவா இயக்க இருந்ததாகவும் கடந்த 2017 ஆம் ஆண்டு செய்திகள் வெளியானது. இந்த படத்தில் கிடைக்கும் லாபத்தை நடிகர் சங்க கட்டட நிதிக்கு தருவதாகவும் தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டிருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட ஆரம்பகட்ட பணிகள் நடந்தபோது திடீரென இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டது. மேலும் இந்த படம் டிராப் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த திரைப்படம் உருவாக இருப்பதாகவும் விஷாலுக்கு பதிலாக வேறு ஒரு பிரபல ஹீரோ நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விளக்கம் அளித்துள்ளார்

‘கருப்புராஜா வெள்ளை’ ராஜா படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாகவும், மீண்டும் அந்த படத்தை தயாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் எனவே இந்த படம் மீண்டும் தயாரிக்க இருப்பதாகவும் இதில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா நடிக்க இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி வதந்தி என்பது உறுதியாகியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.