close
Choose your channels

கொரோனா தடுப்புப் பணிக்கு பிரபல தயாரிப்பாளர் ரூ.1 கோடி நிதியுதவி!

Friday, June 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசிற்கு பிரபல தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அவர்கள் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இந்தத் தொகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழிங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் தாராளமாக நிதி வழங்குங்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதையடுத்து நடிகர் சூர்யா, விக்ரம், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன், இயக்குநர் சங்கர், ஏர்.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, சன் பிக்சர்ஸ், வேல்ஸ் நிறுவனம் எனப் பலரும் நன்கொடைகளை வழங்கி இருந்தனர்.

அந்த வகையில் தற்போது கோகுலம் ஸ்டூடியோ நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தயாரிப்பாளரான கோகுலம் கோபாலன் அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி நிதியை வழங்கியுள்ளார். இவர் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “தூங்காவனம்”, நடிகர் மம்முட்டியின் “பழசிராஜா“, “காயங்குள கொச்சுன்னி” நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான “தனுசு ராசி நேயர்களே” போன்ற திரைப்படங்களை தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.