close
Choose your channels

சிம்புவின் 'கொரோனா குமார்' படம் என்ன ஆச்சு? தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தகவல்

Monday, September 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. அதேபோல் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ’பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படம் என்ன? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள நிலையில் கொரோனா குமார்’ படம் விரைவில் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கொரோனா குமார்’ படம் டிராப் ஆகி விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கொரோனா குமார்’ குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா குமார்’ படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் கொரோனா குமார்’ கண்டிப்பாக வருவார் என்றும் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’பத்து தல’ படத்தை முடித்தவுடன் கொரோனா குமார்’ படத்தில் சிம்பு நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சிம்புவின் எதிர்பார்ப்புக்குரிய ஒரு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.