சமூக அக்கறையுடன் இளைஞர்களுக்கு தேவையான படம்: இருட்டு அறையில் முரட்டு குத்து குறித்து பிரபல தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Monday,May 07 2018]

சமீபத்தில் வெளிவந்த கவுதம் கார்த்திக்கின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'; திரைப்படம் நல்ல வசூலை பெற்று வந்தாலும் இந்த படத்திற்கு கண்டனங்கள் குவிந்துள்ளது. ஏ சான்றிதழ் படம் என்பதற்காக ஆபாசத்தை இந்த படம் அள்ளி தெளித்துள்ளதாகவும், சமூக அக்கறையின்றி இளைஞர்களை தவறாக வழிநடத்தும் வகையில் இந்த படம் இருப்பதாகவும் பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் இயக்குனர் பாரதிராஜாவும் இந்த படத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படம் 'சமூக அக்கறையுடன் கூடிய   இளைஞர்களுக்கும் சமூகத்துக்கும் தேவையான நல்ல செய்திகள் அடங்கிய படம் என்றும் பிரபல தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் இந்த படம் குறித்து அவர் மேலும் கூறியபோது, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு சிறந்த முறையில் சென்சார் செய்த தணிக்கைக்குழு வாரியத்தை வாழ்த்துவதாகவும்,  நல்ல செய்திகள் அடங்கிய இதுபோன்ற படங்களுக்குத் தணிக்கைக்குழு வாரிய உறுப்பினர்கள் தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கிண்டலுடன் கூறியுள்ளார்.

மேலும் ‘பத்மாவதி’ படத்துக்கு சென்சார் பிரச்சினை வந்தபோது தான் ஆச்சரியப்பட்டதாகவும்,. ஆனால், இப்போதுதான் தெரிகிறது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தைவிட ‘பத்மாவதி’ நல்ல படம் இல்லையென்று என்றும், எந்த மாதிரியான படம் எடுக்க வேண்டுமென்று மத்திய தணிக்கைக்குழு வாரியம் இதன்மூலம் அனைவருக்கும் தெளிவாகத் தெரிவித்து வழிகாட்டியதற்கு நன்றி” என்றும் சதீஷ்குமார் மேலும் கூறியுள்ளார்.

More News

டிஎஸ்பி விஸ்ணுப்ரியா வழக்கு கைவிடப்பட்டதா? சிபிஐ அதிகாரிகள் கூறுவது என்ன?

கடந்த 2015ஆம் ஆண்டு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா, தான் தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்

நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சென்னை நடிகை

சென்னையில் பிறந்து வளர்ந்து பின்னர் ஹாலிவுட் வரை சென்று நடிகையானவர் நடிகை பத்மா லட்சுமி. இவர் அவ்வப்போது தனது இன்ஸாகிராமில் நிர்வாண, அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி

கிண்டலான விமர்சங்களுக்கு பதிலளித்த சமந்தா

திருமணத்திற்கு பின்னர் நடிகை சமந்தா நடித்து வெளிவந்த 'ரங்கஸ்தலம்' படத்தில் அவர் லிப்கிஸ் கொடுத்த காட்சி குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் எழுந்தன.

பணம் சம்பாதிக்க இதுதானா வழி! சமீபத்தில் வெளிவந்த திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்த பாரதிராஜா

சமீபத்தில் முழுக்க முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசமான காட்சிகளுடன் ஒரு திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது.

மின்னல் வேகத்தில் முடிவடைந்து வரும் 'செக்க சிவந்த வானம்'

ஒரு ஹீரோவை வைத்து படமெடுக்கும் இயக்குனர்களே அந்த படத்தை முடிக்க பல சிரமங்களை சந்தித்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்னம், தனது அடுத்த படமான 'செக்க சிவந்த வானம்' படத்தில்