சமந்தா படத்திற்காக போடப்பட்ட ரூ.3 கோடி செட்: தயாரிப்பாளரின் ஆச்சரியமான தகவல்

  • IndiaGlitz, [Tuesday,February 22 2022]

நடிகை சமந்தா நடித்துவரும் யசோதா என்ற திரைப்படத்திற்காக 3 கோடி ரூபாய் செலவு செய்து 7 ஸ்டார் ஹோட்டல் செட் போடப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த செட் எதற்காக போடப்பட்டது என்பது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் கூறியதாவது:

சமந்தா நாயகியாக நடிக்கும் எங்களின் பிரமாண்ட படைப்பான ‘யசோதா’ படத்தின் கதை 30 முதல் 40% காட்சிகள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தான் நடக்கிறது. இதற்காக நாங்கள் பல நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றோம், ஆனால் இதுபோன்ற ஹோட்டல்களில் 35, 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது மிக சிரமமாக இருந்தது. எனவே, கலை இயக்குனர் அசோக்கின் மேற்பார்வையில் நானக்ராம்குடாவின் ராமாநாயுடு ஸ்டுடியோவில் 3 கோடி மதிப்பிலான 2 மாடிகள் கொண்ட பிரமாண்ட செட் ஒன்றைத் அமைக்க முடிவு செய்தோம். இதில் 7 முதல் 8 செட் டைனிங் ஹால், லிவிங் ரூம், கான்ஃபரன்ஸ் ஹால், லைப்ரரி என ஒரு 7 ஸ்டார் நட்சத்திர ஹோட்டலில் உள்ள அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டது. பிப்ரவரி 3-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி, சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோரின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. டிசம்பர் 6 முதல் கிறிஸ்மஸ் வரை முதல் கட படப்பிடிப்பு முடித்து, ஜனவரியில் சங்கராந்திக்கு முன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்துள்ளது, எஞ்சியுள்ள முக்கிய காட்சிகள் கொடைக்கானலில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடித்து, இப்படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

இந்த பிரமாண்டை செட்டை அமைத்த கலை இயக்குநர் அசோக், ‘ஒக்கடு’ படத்தின் பிரமாண்ட சார்மினார் செட் மற்றும் பல்வேறு படங்களில் பிரமாண்ட அரங்குகள் அமைத்ததற்காக பிரபலமானவர். அவர் தெலுங்கு மற்றும் தமிழில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதைக்கு ஏற்ற சிறந்த அரங்குகளை அமைத்து புகழ் பெற்றுள்ளார்., யசோதா செட் அவரது திறமையை மேலும் சிறக்க்க செய்வதாக இருக்கும் என்று படக்குழு கூறுகிறது.

இப்படத்தில் சமந்தா உடன், வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மணிசர்மா இசையில் எம் சசிகுமார் ஒளிப்பதிவில் மார்த்ந்த் வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஹரி-ஹரீஷ் இயக்கி வருகின்றனர்.

More News

நீண்ட நாட்களுக்கு பின் சந்தோஷமாக இருக்கின்றேன்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவு

சமீபத்தில் கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோஷமாக இருக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

இருக்கிற மரியாதையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்: கே.பாக்யராஜூக்கு செல்வமணி தரப்பு பதிலடி!

பிப்ரவரி 27ஆம் தேதி இயக்குனர் சங்க தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் கே பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணியும், செல்வமணி தலைமையிலான புது வசந்தம் என்ற அணியும்

'ஏதோ என்னால முடிஞ்சது: 'அரபிக்குத்து' பாட்டுக்கு ஷிவாங்கியின் டான்ஸ்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்; படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே .

செஸ் போட்டியில் உலகச் சாம்பியனையே வீழ்த்திய சென்னை சிறுவன்…. குவியும் பாராட்டு!

உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற மாஸ்டர் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் நார்வே நாட்டைச்

எலான் மஸ்க்கின் புதிய காதலி யார் தெரியுமா? வைரலாகும் தகவல்!

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மின்சார கார் உற்பத்தி பற்றிய தகவல்கள்