close
Choose your channels

என் படத்தையும் பாருங்க! தியேட்டர் வாசலில் கெஞ்சிய தயாரிப்பாளர்

Friday, May 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வெள்ளியன்றும் நான்கு அல்லது ஐந்து படங்கள் வெளியானபோதிலும், டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் ஒன்று அல்லது இரண்டு படங்களை மட்டும் பார்த்துவிட்டு மற்ற படங்களை பார்க்காமல் விட்டுவிடுகின்றனர். அல்லது இணையதளத்தில் பார்த்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் இன்று விஷாலின் 'அயோக்யா' உள்பட ஐந்து படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. இதில் ஒருசில பிரச்சனை காரணமாக 'அயோக்யா' ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் இன்று வெளியான படங்களில் 'எங்கு சென்றாய் என் உயிரே' என்ற படமும் ஒன்று ஆகும்.

இந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆர்.வி.பாண்டி என்பவர் இன்று திரையரங்கு ஒன்றின் வாசலில் நின்று ரசிகர்களிடம் எனது படத்தையும் பாருங்கள் என்று கெஞ்சி கூத்தாடி டிக்கெட்டை தனது சொந்த காசில் வாங்கி குறைந்த விலைக்கு தந்துள்ளார். மேலும் படம் பிடிக்கவில்லை என்றால் ரூ.100 தருவதாகவும் டிக்கெட் வாங்கியவர்களிடம் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். ஒரு தயாரிப்பாளர் இந்த அளவுக்கு இறங்கி வந்து ரசிகர்களிடம் கெஞ்சுவதை பார்த்து ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.