நடிகர் ஸ்ரீ மோசமான நிலைக்கு நான் காரணமா? தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ஸ்ரீ சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவதாக சமூக ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் பரவுகின்றன. இதையடுத்து, அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது போதைப் பழக்கத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதற்கிடையே, ஸ்ரீ நடித்த ’இறுகப்பற்று’ திரைப்படத்திற்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் தான் அவருடைய இந்த நிலைக்கு காரணம் என்ற வதந்தியும் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலைமைக்கு தெளிவூட்டும் விதமாக, ’இறுகப்பற்று’ திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவான எஸ்.ஆர். பிரபு இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
"நாங்கள், ஸ்ரீயின் உடல் மற்றும் மனநிலைக்காக உண்மையிலேயே கவலைப்படுகிறோம். அவருடைய குடும்பத்தினரும் நாங்களும் தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். இது மிகுந்த வருத்தத்திற்குரிய நிலை. தற்போது, பல ஊகங்களும் தவறான தகவல்களும் பரவி வருகின்றன.
ஆனால், எங்களின் ஒரே நோக்கம் ஸ்ரீ மீண்டும் ஒரு நல்ல மனநிலையுடனும், ஆரோக்கியத்துடனும் திரும்ப வர வேண்டும். இதற்காக யாரேனும் உதவ விரும்பினால், நாங்கள் மிகவும் நன்றியுடன் ஏற்கத் தயாராக இருக்கிறோம்."
இந்த வகையில், தயாரிப்பு தரப்பிலிருந்து வெளியான இந்த விளக்கம் மூலம், ’இறுகப்பற்று’ பட சம்பள விவகாரம் குறித்து பரவிய தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
We ar genuinely concerned about the health and well being of Shri. His family and friends including us are trying to reach him for a long time. It is so unfortunate that there is so much speculation forming around it. But reaching Shri and bring him back to good health will be…
— SR Prabu (@prabhu_sr) April 14, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments