close
Choose your channels

கல்லூரி மாணவிகளை குறிவைக்கும் விபச்சார புரோக்கர்கள்! 1 மணி நேரத்திற்கு, 10 ரூபாய்! அதிர வைக்கும் தகவல்!

Friday, May 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பார்ட் டைம் என்கிற பெயரில் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளையும் ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் மாணவிகளையும் குறிவைத்து, ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்து வந்த கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் ஆன்லைன் மூலமாக சிலர் விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நீண்ட தேடுதலுக்குப் பின் மும்பை ஹாட் காலெக்ஷன் டாட் காம் என்கிற பெயரில், இணையதளம் ஒன்றை ஏற்படுத்தி விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது.

இந்த வெப்சைட்டில் உள்ள எண்ணிற்கு வாடிக்கையாளர்கள் மிஸ்ட் கால் கொடுத்தால் உடனே அவர்களுடைய போனுக்கு ஒரு மெசேஜ் வரும். அவர்களுக்கு எந்தப் பெண் வேண்டும், எவ்வளவு கட்டணம், உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படும்.

இந்த கும்பலை வளைத்துப் பிடிக்க போலீசார் 2 பேரை டம்மியாக நடிக்கவைத்து, தனியார் ஹோட்டல் ஒன்றில் ரூம் புக் செய்து விபச்சாரத்திற்காக பெண்களுடன் வந்த 2 புரோக்கர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில். மும்பை மட்டுமல்லாது, சென்னை, கொல்கத்தா, உள்ளிட்ட பல பகுதிகளில் கல்லூரி மாணவிகளின் பார்ட் டைம் என்கிற பெயரில் விபச்சாரத்தில் இந்த கும்பல் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது.

மேலும் புரோக்கர்களுடன் வந்த இரண்டு பெண்களும் கல்லூரி மாணவிகள் என்றும் உறுதியானது. இந்த ஆன்லைன் கும்பல் பெரும்பாலும், வெளியூர்களிலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் கல்லூரி மாணவிகளையும், ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவிகளையும், பண ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகிறது என்றும், இதில் இன்னும் யார் யார் இருக்கின்றனர், என அடுத்த கட்ட விசாரணையை தீவிர படுத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.