close
Choose your channels

வீடு முற்றுகை, உருவ பொம்மை எரிப்பு: தீவிரமாகும் ரஜினிக்கு எதிரான போராட்டம்

Monday, January 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பெரியார் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஒரு சில காவல் நிலையங்களில் ரஜினிகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக தொடர்ந்து தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று ஆதித்தமிழர் பேரவை என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ரஜினிகாந்த் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தியுள்ள நிலையில் தற்போது ஜனவரி 22ஆம் தேதி ரஜினிகாந்த் வீடு முற்றுகை இடப்படும் என திவிக என்ற அமைப்பு அறிவித்துள்ளது. அதனை அடுத்து ஜனவரி 23ஆம் தேதி தந்தை பெரியார் திக என்ற அமைப்பு ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது.

ரஜினிக்கு எதிராக முற்றுகை போராட்டம், உருவபொம்மை எரிப்பு ஆகிய போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos