31 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.விசி-38 ராக்கெட். இஸ்ரோ சாதனை

  • IndiaGlitz, [Friday,June 23 2017]

இஸ்ரோ நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.விசி-38 ராக்கெட், 31 செயற்கைகோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி உள்பட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே கார்ட்டோசாட்' வகை செயற்கைகோள்களை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வரும் நிலையில் 7–வது கார்ட்டோசாட்–2இ என்ற செயற்கைகோள் சரியாக இன்று காலை 9.29 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்த பி.எஸ்.எல்.விசி-38 ராக்கெட்டில் கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் அமெரிக்கா ஆகிய 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 29 செயற்கைகோள்களுடன், இந்தியாவைச் சேர்ந்த 1 நானோ செயற்கைகோள் என மொத்தம் 31 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இந்த செயற்கைகோள்களின் மொத்த எடை 955 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.
பூமியில் இருந்து 505 கிமீ உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் நிறுத்தப்படும் இந்த செயற்கைக்கொள்களில் உள்ள அதிநவீன கேமிராக்கள் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுத்து அனுப்பும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

More News

விஜய்-அஜித் படங்களை இயக்க வேற ஒரு மேஜிக் வேண்டும். பிரபல இயக்குனர்

ஜெயங்கொண்டான்', கண்டேன் காதலை', சேட்டை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் இயக்கிய 'இவன் தந்திரன்' திரைப்படம் விரைவில் ரிலிஸ் ஆகவுள்ளது

சிம்பு ரசிகர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

விராத் கோஹ்லி இவ்வளவு அர்ப்பமானவரா? கும்ப்ளே ரசிகர்கள் கொதிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது வெட்டவெளிச்சமானதை அடுத்து பயிற்சியாளர் பதவியில் இருந்து நாகரீகமாக விலகினார் கும்ப்ளே.

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் பெயர் அறிவிப்பு

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது

பும்ரா வீசிய நோபால் இதுக்காவது பயன்படுதே!

சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியை இப்பொழுது நினைத்தாலும் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கும் அளவில்லாத ஆத்திரம் வரும். குறிப்பாக பும்ரா வீசிய நோபாலில் தப்பிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஜமான், 111 ரன்கள் அடித்ததும் இந்தியாவின் தோல்விக்கு இதுவும் ஒரு மிகப்பெரிய காரணம் என்பதையும் இன்னும் சில வருடங்&