close
Choose your channels

மனைவியை அறையில் பூட்டி சுற்றி சுவர் கட்டிய சைக்கோ கணவன் கைது!

Monday, May 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆந்திராவைச் சேர்ந்த சைக்கோ கணவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை வீட்டில் பூட்டி வைத்து, அறையை சுற்றி சுவர் கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட ஸ்வீட் கடை நடத்தி வருபவர் ராகவா ரெட்டி. இவரது மகன் ஏக்நாத் ரெட்டி மற்றும் பெங்களூர் தொழில் அதிபர் மகள் பிரகன்யாவுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

திருமணத்தின்போது கோடிக்கணக்கில் ரொக்கம் மற்றும் தங்க நகை வெள்ளி நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட போதிலும் ஐதராபாத்தில் வணிக வளாகம் ஒன்றை வரதட்சணையாக வாங்கி தரவேண்டுமென மாப்பிள்ளை வீட்டார் கேட்டு உள்ளனர். ஆனால் பிரகன்யாவின் பெற்றோர் வாங்கிக் கொடுக்காததால் பிரகன்யா கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் மனைவி, மகளை அவ்வப்போது கொடுமைப்படுத்திய சைக்கோ கணவன் ஏக்நாத், ஒருகட்டத்தில் தனது மனைவியையும், மகளையும் ஒரு அறைக்குள் பூட்டி அந்த அறையை சுற்றி சுவர் எழுப்பியதாக தெரிகிறது. இது குறித்த தகவலை பிரகன்யா தனது பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து போலீசாருடன் வந்த பிரகன்யாவின் பெற்றோர், இருவரையும் மீட்டனர் .

இந்த சம்பவத்தை அடுத்து ஏக்நாத் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து செய்துள்ளனர். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்த ஏக்நாத் வெற்றி தலைமறைவாகி விட்டதாகவும் அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.