close
Choose your channels

250 மூட்டைகள் அரிசி வழங்கி உதவி செய்த P.T.செல்வகுமார்

Friday, April 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா அச்சத்தால் வீட்டில் முடக்கியிருக்கும் ஏழை மக்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து உதவி கரம் நீட்டி வருகிறது. ஏற்கனவே கஜா புயலால் பாதிக்கபட்ட நபர்களுக்கு முதன்முதலில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் T.ராஜேந்தர் தலைமையில் அனுப்பியதுடன் பட்டுக்கோட்டையில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் முன்னினையில் 100 பசுங்கன்றுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருச்சி வல்லத்தில் வைரமுத்து தலைமையில் 1002 ஆட்டு குட்டிகள் கொடுக்கப்பட்டன.

இந்த நிலையில் இப்போது கடந்த 4 நாட்களாக கொரானவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேளம்பாக்கம், துரைப்பாக்கம் பகுதிகளில் வசிக்கின்ற வட மாநில தொழிலாளர்கள், இருளர் இனத்தவர்கள், ஆந்திரா கட்டிட தொழிலாளர்கள் மற்றும் பர்மா அகதிகள் என அனைவருக்கும் சுமார் 250 மூட்டைகள் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் முககவசங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வில் கலப்பை மக்கள் இயக்க நிறுவுனர், தலைவர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் P.T.செல்வகுமார் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கலப்பை மாநில ஒருங்கிணைப்பாளர் V.K.வெங்கடேசன், கிராம அதிகாரி பொன்னுதுரை, சமூகஆர்வலர் வேந்தரசி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.