close
Choose your channels

ஆபாச பேச்சு, அதிகார மிரட்டல்....! யார் இந்த பப்ஜி மதன்...?

Monday, June 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மதன் குமார் மாணிக்கம் என்பது இவரோட முழுப்பெயராகும். சிவில் எஞ்சினியரிங் முடித்த இளைஞர், பணக்கராக வீட்டு பையன் என்றும் சொல்லலாம். 29 வயதுள்ள மதனின் சொந்த ஊர் சேலம், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா,தங்கையை இவர் அப்பா திருமணம் செய்துள்ளார். ஒரு மனைவிக்கு மதனும், ஒரு சகோதரரும் உள்ளனர். மற்றொரு மனைவிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். "ஹீரோ" என்ற ஹோட்டலை இவர்கள் குடும்பத்தினர் நடத்தி வந்துள்ளனர்.

கடந்த 2019-அம ஆண்டு முதல் "மதன்" என்ற தன்னுடைய பெயரிலே யூடியுப் சேனலை நடத்தி வருகிறார். இதுவரை சுமார் 659 வீடியோக்களையும், 778K சப்ஸ்கிரைபர்களையும் வைத்துள்ளார். இதேபோல் "TOXIC MADAN 18+" என்ற மற்றுமொரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலானது 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்காக மட்டுமே. இதனால் வெறும் 11 வீடியோக்களில் 100K சப்ஸ்கிரைபர்களை விரைவில் அள்ளியுள்ளார். இந்த பப்ஜி கேமிங் சேனல்கள் மூலமாக நிறையா காசு சம்பாரித்தும் வருகிறார்.

கடந்த மூன்று வருடங்களாகவே அவருடைய அடையாளத்தை மிகத்தெளிவா மறைத்துள்ளார். அமேசான்-ல் பொருட்கள் வாங்கினால் கூட இவருடைய, விவரங்கள எதுவும் தராமல், தன்னுடைய நண்பர்களுடைய முகவரி மூலமாகத்தான் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் இவருடைய சேனலை, பப்ஜி விளையாடக்கூடிய 18 வயதிற்கும் குறைவான சிறுவர்கள், சிறுமிகள், இளம்பெண்கள் பார்த்துவருகிறார்கள். பப்ஜி போன்ற லைவ் வீடியோ கேம்களில் எப்படி எளிதில் எளிதாக வெல்வது என்பது குறித்து, ஆபாசமாக பேசுவது மூலம் இவன் பிரபலமானான். குறிப்பாக மதனுடன் விளையாடும் சகபோட்டியாளர்கள் மற்றும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளான். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தால், என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது, என்னை காப்பாற்ற என் வக்கீல் உள்ளார். எந்த விதமான பணப்பிரச்சனை வந்தாலும் என்னால் பார்த்துக்கொள்ள முடியும் என்று பலருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதே அதிகாரத்தின் உச்சம். ஆதரவற்ற மக்களுக்கு உதவுவதாகவும், இளைஞர்களிடம் இருந்து நன்கொடை பெற்று ஏமாற்றி வருகிறார். மதனின் இந்த ஆபாச பேச்சு காரணமாக, அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி புளியந்தோப்பு காவல்துறையினர் உத்தரவிட்டதன் பேரில், மதன் தற்போது தலைமறைவாகி உள்ளான்.

பெண்களிடம் ஆபாச பேச்சு:

தன்னுடைய யூடியூப்-இல், இன்ஸ்டாகிராம் பக்கத்தை இணைத்துள்ள மதன், சிறுமிகளை அந்த சமூக வலைத்தளத்திற்கு வருமாறு அழைத்து அந்தரங்க பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளான். மேலும் குறிப்பாக ஆன்லைன் விளையாட்டிற்கு வரும் சில பெண்களை குறிவைத்து, இரவில் ஆடையில்லாமல் வீடியோ சார்ட் செய்யலாம், நீ ஆணாக மாறினால் என்ன செய்வாய், பெண்ணாக மாறினால் என்ன செய்வாய் என்று பெண்களிடம் வினவுவது ஆபாசத்தின் உச்சம். இதையடுத்து பெண்களின் அந்தரங்க உறுப்புகள் பற்றி ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாரிடமும் கேவலமாக பேசியுள்ளேன் இந்த கொடூரன்.

இதற்கு அடுத்த கட்டமாக அந்தரங்க மருத்துவராக மாறிய மதன், முதலிரவிற்கு செல்லும் ஆண்கள் கை,கால்,இடுப்பு பகுதி மற்றும் உடலை எப்படி வலுவாக வைத்துக்கொள்ளலாம் என்றும் ஆபாச டிப்ஸ் கொடுத்துள்ளான். பெண்களிடம் என்னிடம் மூன்றாவது மனைவியாகவே இருந்து கொள், என அந்தரங்க பேச்சுக்களை அடுக்கிக்கொண்டே போயுள்ளான். ஆனால் இதெல்லாம் தெரியாத சில குழந்தைகளும், இது போன்று சேனல்களை துவங்கி விளையாட்டில் கெட்ட வார்த்தைகளை பேசி வருகின்றனர். மதனின் பேன்ஸ் என சொல்லித்திரியும் சிலரும் அவருக்கு வரிந்துகட்டிக்கொண்டு நல்லவர் என்று கொடி தூக்கி வருகிறார்கள்.

மாநில குழந்தைகள் உரிமைகள் ஆனையமும், சைபர் கிரைம் துறையினர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவிலும் மதன் புகாரளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மதனின் இன்ஸ்டா பக்கத்தை விரைவில் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவனின் யுடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கு காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.