close
Choose your channels

பொதுத்தேர்வு இன்றி பாஸ் என முதல்வர் அறிவிப்பு: எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?

Thursday, February 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது என்பதும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு இன்றி பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சற்று முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 9, 10 மற்றும் 11 ஆகிய வகுப்பு மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி பாஸ் என அதிரடியாக அறிவித்துள்ளார். எனவே இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொது தேர்வு நடைபெறும் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.