'தளபதி 61' படத்துடன் கனெக்சன் ஆன 'புலி' தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Sunday,April 09 2017]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் சென்னை படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ராஜஸ்தானில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனையடுத்து படக்குழுவினர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் பாதி கூட முடியாத நிலையில் தற்போதே இந்த படத்தின் வியாபாரம் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் கேரள மாநில உரிமையை 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபுதமீன்ஸ் அவர்களின் தமீன் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் 'புலி' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை இந்த படத்தின் மூலம் சிபுதமீன்ஸ் ஈடுகட்டிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துவருகிறது. அட்லி இயக்கி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

More News

8 தோட்டாக்கள் இயக்குனரை மகனாக ஏற்றுக்கொண்டேன். பிரபல நடிகர்

சமீபத்தில் வெளியான அறிமுக இயக்குனரும், மிஷ்கின் உதவியாளருமான ஸ்ரீகணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் நல்லாதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...

'விவேகம்' இயக்குனரின் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார்?

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளது. தற்போது பல்கேரியாவில் உள்ள 'விவேகம்' படக்குழுவினர் வரும் 19ஆம் தேதி சென்னை திரும்புவார்கள் என்றும், அதன் பின்னர் முழுவேகத்தில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது...

கணவர் இறந்த செய்தியை கண்ணீருடன் டிவியில் வாசித்த செய்தியாளர்

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கும் ஒரு பெண், தனது கணவர் இறந்த செய்தியையே பிரேக்கிங் செய்தியாக வாசித்த உருக்கமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது...

அட்லியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற வெற்றிப் படத்தை இயக்கியவரும், தற்போது 'தளபதி 61' படத்தை இயக்கி வருபவருமான இயக்குனர் அட்லி தயாரித்து வரும் 'சங்கிலி புங்கிலி கதவை தொற' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....

மகளுக்கு புத்தாடை வாங்க 2 ஆண்டுகள் பிச்சை எடுத்த தந்தை.

ஒரு குழந்தைக்கு தாயின் பாசம் எந்த அளவுக்கு முக்கியமோ அதற்கு சிறிதும் குறைவில்லாதது தந்தையின் பாசம் என்பதை நிரூபிக்கும் வகையில் பிச்சைக்காரர் ஒருவர் தனது மகளுக்கு புத்தாடை அணிந்து அழகு பார்க்க இரண்டு ஆண்டுகள் பிச்சை எடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.