புனித் ராஜ்குமாரின் கண்களால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்தது எப்படி?

  • IndiaGlitz, [Monday,November 01 2021]

பொதுவாக கண் தானம் செய்யப்பட்டவர்களுடைய கண்கள் இருவருக்கு தானம் செய்யப்பட்டு அவர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் மரணமடைந்த புனித் ராஜ்குமாரின் கண்களால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது

மாரடைப்பு காரணமாக காலமான நடிகர் புனித் ராஜ்குமார் கண்கள் தானம் செய்து இருந்ததை அடுத்து அவரது கண்கள் நாராயண நேத்ராலயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கமாக இருவருக்குத்தான் கண்கள் பொருத்த முடியும் என்ற நிலையில் அந்த மருத்துவமனையின் மருத்துவர் புஜங்கஷெட்டி நான்கு பேருக்கு புனித்தின் கண்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பொருத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக 4 பேருக்கும் பார்வை கிடைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் நல்ல ஆரோக்கியமானதாக இருந்ததால் இரண்டு கண்களின் கார்னியா எனப்படும் விழிப்படலம் முன்பகுதி, பின்பகுதி என தனித்தனியாக பிரிக்கப்பட்டு முன்பகுதி விழிப்படலம் இரண்டு பேர்களுக்கும், பின்பகுதி விழிப்படலம் இரண்டு பேர்களுக்கும் என நான்கு பேர்களுக்கு பொருத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்
இதன் காரணமாக ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் என நான்கு இளைஞர்களுக்கு பார்வை கிடைத்துள்ளதாகவும் நால்வருமே கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து நால்வருக்கும் தற்போது பார்வை திரும்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

கடந்த 2006ஆம் ஆண்டு புனித புனித் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார் இறந்தபோதும் அவரது மனைவி பர்வதம்மாள் இறந்தபோதும், அவர்களுடைய கண்களும் தானம் செய்யப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் இணைகிறதா 'எனிமி' டீம்? இயக்குனர் மட்டும் மாற்றமா?

விஷால், ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனிமி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

திருமணமான மூன்றே நாட்களில் புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!

திருமணமான மூன்று நாட்களில் புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம் குறித்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆயில் பூசிய மேனியோடு இணையத்தில் டிரெண்டிங்கான சூப்பர் சிங்கர் பிரகதி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு பிரபலமானவர் பிரகதி. அமெரிக்காவில்

ஜெய்பீம் படம் பார்த்ததும் நான் சிறையில் பட்ட துன்பங்கள் ஞாபகம் வந்தது: முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பாராட்டுக்கு வார்த்தைகள் இன்இ நெகிழ்ந்து நிற்கிறேன் எனது சூர்யா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை நேற்று

தாமரையை நாமினேட் செய்யும் ஸ்ருதி: இந்த வாரம் வித்தியாசமான நாமினேஷன்! 

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் வித்தியாசமாக நாமினேஷன் படலம் நடக்கிறது.