கோடிகளில் புரண்ட புனித் ராஜ்குமாருக்கு குடிசையில் நினைவு இல்லம்!

  • IndiaGlitz, [Wednesday,January 12 2022]

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கோடிகளில் புரண்ட புனித் ராஜ்குமார் சமீபத்தில் காலமான நிலையில் அவரது நினைவு இல்லம் ஒரு குடிசையில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினர் இடையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகராக மட்டுமின்றி புனித் ராஜ்குமார் ஒரு சிறந்த சமூக சேவகர் என்பதும் அவரது பண உதவியால் 1800 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள் என்பதும், அது மட்டுமன்றி இலவச பள்ளிகள், கோசாலைகள், முதியோர் இல்லம் ஆகியவைகளையும் அவர் தனது சொந்த பணத்தில் நடத்தி வந்தார் என்பது அவரது மறைவிற்குப் பின்னரே பலருக்கு தெரிய வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் புனித் ராஜ்குமாரின் பூர்வீக வீடு கர்நாடக மாநிலத்தில் உள்ள காஜனனூர் என்ற கிராமத்தில் உள்ளது. இந்த வீட்டை கடந்த சில மாதங்களுக்கு முன் பார்வையிட்ட புனித் ராஜ்குமார் தனது தந்தையின் நினைவு இல்லமாக அதை மாற்ற முடிவு செய்தனர். ஆனால் அதற்குள் அவர் காலமாகி விட தற்போது ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் ஆகிய இருவரின் நினைவு இல்லமாக இந்த குடிசை வீடு மாற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் நினைவு இல்லமாக இந்த இல்லம் பழமை மாறாமல் மாறும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் ராஜ்குமாரின் மருமகன் தெரிவித்துள்ளார். இந்த வீடு குறித்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தள்ளிப்போகிறதா பிக்பாஸ் ஓடிடி: புதிய தேதி என்ன?

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் வரும் ஞாயிறு அன்று நிறைவு பெற உள்ள நிலையில் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியான நிலையில்

98 நாட்கள் இருந்த தாமரையின் சம்பளம் இவ்வளவுதானா? 

பிக்பாஸ் வீட்டில் தாமரை 98 நாட்கள் இருந்த நிலையில், அவர் இருந்த நாட்களுக்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இதுக்கு பேரு ஜல்லிக்கட்டா? பேசாம நிறுத்திடுங்க: பிரபல நடிகர் பேட்டி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பதும் அவற்றில் ஒரு கட்டுப்பாடு ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட

எனது நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை: மன்னிப்பு கேட்ட சித்தார்த்

தான் கூறிய நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றும் அதனால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் நடிகர் சித்தார்த் சாய்னா நேவாலுக்கு எழுதியுள்ள மன்னிப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்முறையாக 'நெகட்டிவ்' வார்த்தை கேட்டு சந்தோஷம் அடைகிறேன்: த்ரிஷா டுவிட்

முதல் முறையாக நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டு சந்தோஷம் அடைகிறேன் என நடிகை த்ரிஷா  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.