close
Choose your channels

மே 1 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

Friday, April 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னரும் நீட்டிக்க வேண்டும் என கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

தமிழகத்தில் கூட ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒடிசாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்த நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலமும் மே 1 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப்பை அடுத்து மேலும் சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை 101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் 8 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos